search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் போக்சோவில் கைது"

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து வாலிபரை சிறையில் அடைத்தனர்.

    வடமதுரை :

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள பல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த காளிமுத்தன் மகன் அய்யனார்(21). இவர் நொச்சிபட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியான 10-ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார்.

    மகளை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர் இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் அய்யனார் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து விசாரித்ததில் அவர்கள் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அங்கு சென்றபார்த்தபோது அவர் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை அழைத்து வந்த போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அய்யனார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    ×